முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 புத்த துறவிகள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

பாங்காங்க், தாய்லாந்தில் அடையாளம் தெரியாத நபர்களால் இரு புத்த துறவிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது குறித்து தாய்லாந்து போலீசாரின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது.

தாய்லாந்தின் தென் பகுதியில் அமைந்துள்ள நாராதிவாட் மாகாணத்தில் உள்ள ரத்தனுபாப் புத்த மதம் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 புத்த துறவிகள் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மர்ம நபர்கள் 6 பேர் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து