முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா மாநாட்டில் பங்கேற்ற சத்ருகன்சின்கா மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும்: பிரதாப் ரூடி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, எதிர்க்கட்சிகள் மாநாட்டில் பங்கேற்ற சத்ருகன்சின்கா மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என்று  பா.ஜ.க தேசிய செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் பா.ஜ.க.வுக்கு எதிராக 22 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரிகளான பா.ஜ.க. வை சேர்ந்த யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி, மற்றும் சத்ருகன் சின்கா எம்.பி. ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் எதிர்க்கட்சிகள் நடத்திய மாநாட்டில் அவர் பங்கேற்றது பா.ஜ.க. தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து சத்ருகன்சின்கா மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுதொடர்பாக பா.ஜ.க தேசிய செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது:-

பா.ஜ.க. வழங்கிய எம்.பி. பதவியில் இருந்து சத்ருகன்சின்கா சலுகைகளை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் அதே வேளையில் கட்சிக்கு எதிராக பேசி வருகிறார். இது போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பா.ஜ.க.வுக்கு எப்போதுமே முக்கியமானது. இது தொடர்பாக கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும். சில பேர் கட்சி பின்னால் இருக்க விரும்புகிறார்கள். இதனால் கட்சியில் இருந்து விலகாமல் உள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் சந்தர்ப்பவாதிகளாக உள்ளனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து