முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொந்த ஊரில் தாயாருடன் அளவளாவிய பிரதமர்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

காந்திநகர், தனது சொந்த ஊரான ராய்சன் என்ற கிராமத்திற்கு சென்ற பிரதமர் மோடி, சகோதரர் பங்கஜ் மோடியுடன் வசித்து வரும் தனது தாயார் ஹீராபென்னை நேரில் சந்தித்து பேசினார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 17-ம் தேதி முதல் 3 நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மோடி, காந்தி நகர் அருகில் உள்ள தனது சொந்த ஊரான ராய்சன் என்ற கிராமத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு தனது சகோதரர் பங்கஜ் மோடியுடன் வசித்து வரும் தனது தாயார் ஹீராபென்னை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் நரேந்திர மோடி ஆமதாபாத் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து