எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, தன் குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திக்க கூடிய கட்சிதான் தி.மு.க. என்றும், எந்தக் காலத்திலும் ஸ்டாலினால் முதல்வர் பதவிக்கு வர முடியாது என்றும் மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை தனி வட்டமாக அறிவித்ததற்கு நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பெரிய வட்டங்களை தனியாகப் பிரித்து சிறிய வட்டங்களாகப் பிரிக்கும் போதுதான் கடைக்கோடிப் பகுதியில் உள்ள மக்கள் எளிதாக வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று தங்களுக்குத் தேவையான மற்றும் உதவிகளைப் பெற முடியும். அந்த வகையில்தான் கள்ளிப்பட்டி வட்டம் தனி வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவின் அரசுதான் அதிக எண்ணிக்கையில் புதிய வட்டங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இன்றைக்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த அரசை குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் காலத்தில் எதையும் செய்ததாக தெரியவில்லை. எந்தச் சாதனையும் பெரிதாக செய்ததாக தெரியவில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். மாநிலத்திலும் ஆட்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் குடும்பம் மட்டும் வளம் பெற்றது. தி.மு.க. கட்சி என்றால் அந்த கட்சிதான் குடும்ப கட்சி. ஆனால் அ.தி.மு.க. ஒட்டுமொத்த மக்களுக்கும் சொந்த கட்சி. இந்தக் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது. இந்தக் கட்சியில் சாதாரண நிலையில் இருப்பவர்களும் உயர்ந்த நிலைக்கு வர முடியும். சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, ஏன் முதல்வராக கூட அ.தி.மு.க.வில்தான் வர முடியும். வேறு எந்தக் கட்சியிலும் வர முடியாது. தி.மு.க.வில் கருணாநிதி முதல்வராக இருந்தார். அதற்குப் பிறகு ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு துடிக்கிறார். எந்தக் காலத்திலும் அவர் முதல்வராக வர முடியாது. அது வேறு விஷயம். அதற்குப் பிறகு வாரிசு. அவரின் மகன் உதயநிதியை கட்சிக்கு கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டி முயன்று பார்க்கிறார். இதுதான் வாரிசு அரசியல். மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். தன் மக்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய கட்சிதான் தி.மு.க.
சிந்திக்கக் கூடிய கட்சி. என்னைப் பொறுத்தவரை கிராமத்தில் பிறந்து வாழ்ந்து வருபவன். மேடையில் இருப்பவர்கள் பெரும்பாலும் கிராமத்தில் பிறந்து வாழ்ந்து வருகிறவர்கள். கிராமத்தில் இருக்கின்ற விவசாயிகளுக்கு என்ன பிரச்சனை என்று தெரியும். அதில் வேலை செய்கின்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதும் தெரியும். மக்களோடு மக்களாக நின்று பழகி படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு உங்களின் பேராதவரோடு தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறேன். ஆகவே விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கின்ற அரசு இந்த அரசு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல விவசாய தொழிலாளி வளர வேண்டும். வாழ வேண்டும். சிரித்து வாழ வேண்டும். மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களை அம்மாவின் அரசு வழங்கும். அம்மா வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர். சாதாரண குடிசையில் வாழும் ஏழைகள் கூட கிரைண்டர், மிக்ஸியை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மிக்ஸி, கிரைண்டர் வழங்கியவர் அம்மா. அவர் எடுத்த நடவடிக்கையால் இன்றைக்கு மக்கள் செழிப்போடு இருக்கின்ற காட்சியை பார்க்கின்றோம். எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே திட்டமிட்டு இன்றைக்குப் பொய்யான செய்தியைப் பரப்பி வருகிறார்கள். பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளீர்கள். பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஆயிரம் ரூபாயை வழங்கினோம். இதைக் கூட எதிர்க்கட்சிகள் குறை கூறினார்கள். தி.மு.க. இதனைத் தடுத்து நிறுத்த வழக்கு போட்டது. ஏழைகளுக்கு கொடுப்பதைக்கூட தடுத்து நிறுத்துகிற கட்சிதான் தி.மு.க. எம்.ஜி.ஆர். அம்மா ஆகிய இருவரும் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். மக்கள்தான் அவர்களுக்குக் குடும்பம். மக்களின் பிரச்சனையை தன் பிரச்சனையாக கருதிச் செயல்பட்டவர்கள். அந்த வழியில் வந்த அம்மாவின் அரசையும் மக்கள்தான் வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த அரசுக்குத் துணை நிற்பவர்கள் மக்கள். அது போல இந்த இயக்கத்திற்குத் தலைவர் என்பவர் இல்லை. தொண்டர்களால் இயக்கப்படுகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான். நாடாளுமன்ற தேர்தல் விரைவாக வரவுள்ளது. என்னவெல்லாமோ பொய்களை சொல்வார்கள். இன்றைக்கு கிராமம் கிராமாக சென்று பார்க்கிறார்கள். இத்தனை நாட்களாக கிராமத்தில் உள்ள மக்களை ஸ்டாலின் கண்களுக்கு தெரியவில்லை. கிராம மக்களுக்கு கொடுப்பதையே தடுத்து நிறுத்துபவர்கள், இவர்கள் எப்படி நல்லது செய்யப் போகிறார்கள். இதனை எல்லாம் நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நம்முடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக புதிய திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வர வேண்டியதற்காக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து மாபெரும் வெற்றியைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்குத் தமிழகம் அனைத்து வகையிலும் முதன்மை மாநிலமாக விளங்குவதற்கு அரசு தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாத்தூர் வழியாக நெல்லை சென்றார். சாத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.