முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஜம்மு காஷ்மீரில் உள்ள பல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் பல்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதி இன்னும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து