எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், -:பழனி முருகன் கோவிலில் அரோகரா கோஷம் விண்ணைப் பிழக்க தைப்பூசத் தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் சென்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசத் திருவிழாவாகும். இத்திருவிழாவின் முக்கிய நோக்கமே பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதோடு பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்துவது தான். இவ்வருடத்திற்கான திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மு;த்துகுமாரசாமி, வள்ளி - தெய்வானை தினந்தோறும் வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தைப்பூசத் திருவிழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் வெளிப்பிரகாரத்தில் மலர்களால் திருமண மேடை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்நதது. அதில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அவர்களுக்கு 16 வகை அபிஷேகங்கள் செய்யப்ட்டு மகா தீபாதாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க மங்கல நாண் வள்ளி - தெய்வானைக்கு அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மு;த்துகுமாரசாமி, வள்ளி - தெய்வானையுடன் தோளுக்கினியாள் வாகனத்தில் எழுந்தருளி சண்முகநத்pயில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பின பெரியநாயகி அம்மன் கோவில் வந்தார்.
முன்னதாக காலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்;னீர்செல்வம் தனது குடும்பத்துடன் பழனி மலைக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். அவரை முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபாலு, சுப்புரத்தினம், நகர செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்று மலைக்கோவிலுக்கு அழைத்து சென்றனர். துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மாலையில் தேர்க்கால் பார்த்தல், திருத்தேரேற்றமும் அதனை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ், உட்பட முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, ஞானதண்டாயுதபாணிக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பினர். பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணைப் பிழக்கும் வகையில் எதிரொலித்தது.
தைப்பூசத் தேரோட்டத்தைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி கோவிலுக்கு வந்திருந்தனர். பாதயாத்திரையாகவும் வாகனங்கள் மூலமாகவும், பேருந்து மற்றும் ரயில் மூலம் வந்த பக்தர்கள் பழனியில் குவிந்ததால் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது, பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது. பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் வழிநெடுகிலும் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்புக்கான மதுரை, தேனி. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தைப்பூசத் தேரோட்டத்தை முன்னிட்டு திண்டு;க்கல் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் தமிழகத்தில் திருச்செந்தூர் உட்பட அறுபடை வீடுகளிலும் தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.