முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேஷியா பாட்மின்டன்: இந்திய வீராங்கனை செய்னா சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

ஜகார்த்தா : இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் ஸ்பெயினின் கரோலினா காயத்தால் பாதியில் விலகினார்.

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பைனலில் தர வரிசையில் 9-வது இடத்திலுள்ள இந்தியாவின் செய்னா, நம்பர்-4 வீராங்கனையான ஸ்பெயினை சேர்ந்த கரோலினா மரினை எதிர் கொண்டார். முதல் செட்டில் கரோலினா 9-3 என முன்னிலையில் இருந்தார். அப்போது, இவர் செய்னா அடித்த பந்தை திருப்பி அனுப்ப முயற்சி செய்த போது, தவறி விழுந்தார்.

வலது காலின் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் வலியால் துடித்தார். சில நிமிடத்தில் மீண்டு வந்தபோதும், வலி அதிகமாக கண்ணீர் விட்டு அழுதார். போட்டியிலிருந்து பாதியில் விலகினார். இதனையடுத்து, செய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, சாம்பியன் பட்டத்தை வசமாக்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து