முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பந்து ஸ்விங் ஆனால் நான் வித்தியாசமான பவுலர் - நியூசி. வீரர் போல்ட் சொல்கிறார்

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

ஹாமில்டன் : பந்து ஸ்விங் ஆனால் நான் வித்தியாசமான பந்து வீச்சாளர் என்று நான்காவது போட்டியில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

5 விக்கெட்கள்...

நியூசிலாந்து - இந்தியா இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஹாமில்டனில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் ஸ்விங் பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. இதனால் இடது கை வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட் இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். ரோகித் சர்மா (7), ஷிகர் தவான் (13), ஷுப்மான் கில் (9), கேதர் ஜாதவ் (1), ஹர்திக் பாண்டியா (16) ஆகியோரை வீழ்த்தினார்.

தொடர்ந்து 10 ஓவர்களை வீசிய டிரென்ட் போல்ட் 4 மெய்டன் ஓவர்களுடன் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இவரது பந்து வீச்சால் இந்தியா 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 92 ரன்னில் சுருண்டது.

ஸ்விங் ஆனால்...

இந்தியா மோசமான தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த டிரெண்ட் போல்ட், பந்து ஸ்விங் ஆனால் நான் வித்தியாசமான பந்து வீச்சாளர் என்று தெரிவித்தார். இதுகுறித்து டிரென்ட் போல்ட் கூறுகையில் ‘‘இந்த மாயாஜாலம் எல்லாம் சீதோஷ்ண நிலையை பொறுத்தது. பந்து காற்றிலே மூவ் ஆனதை பார்க்க சிறப்பாக இருந்தது. எப்போதுமே பந்து ஸ்விங் ஆனால் நான் வித்தியாசமான பந்துவீச்சாளர் என்று கருதுவேன். அந்த நிலையை இன்று (நேற்று) உருவாக்கினேன்.

போதுமானது...

இந்தியாவிற்கு எதிராக முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய விதம் ஏமாற்றம் அளிக்கிறது. எங்களுடைய திறமை குறித்து எங்களுக்குத் தெரியும். திட்டத்தை வெளிப்படுத்த ஒருநாள் போதுமானது. அந்த நாள் இன்று (நேற்று) கிடைத்தது. இதன் மூலம் திருப்தியடைகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து