முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்விட்டர், முகநூலில் இருந்து வெளியேற பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 1 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என ராணுவ தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் ராவல் பிண்டியில் இயங்கும் ராணுவ தலைமை அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய ராணுவ ரகசியங்கள் மற்றும் தகவல்கள் கசிவதை தடுக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து