முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஞ்சம் வாங்கக்கூடாது என்று என் தாய் சத்தியம் வாங்கினார்- பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : என்ன வேலை செய்தாலும் லஞ்சம் மட்டும் வாங்க கூடாது என தன் தாய் சத்தியம் வாங்கியதாக பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.   

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு ஹூமன்ஸ் ஆப் பாம்பே என்ற முகநூல் பக்கத்தில் ஐந்து வார தொடராக வெளியாகி வருகிறது. முந்தைய பதிவுகளில் மோடி தனது இளமைக்கால அனுபவங்களையும், நண்பர்கள் பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து இருந்தார். தற்போதைய பதிவில் தனது தாய் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில்,

‘நிறைய பேர் என்னிடம் நீங்கள் பிரதமரானபோது உங்கள் தாய் அதை எப்படி பார்த்தார் என்று கேட்டுள்ளனர். நான் பிரதமரான பிறகு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் என் பெயர் கேட்டது.

என் புகைப்படங்கள் ஒட்டப்பட்டன. தொண்டர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் என் தாய் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் குஜராத் முதல்வராக தேர்வானபோதுதான் என் தாய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். நான் குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்பதற்கு முன்னால் டெல்லியில் தங்கியிருந்தேன். என் தாய் அகமதாபாத்தில் என் சகோதரருடன் வாழ்ந்து வந்தார். அப்போது டெல்லியில் இருந்து அகமதாபாத் வரும்போது மக்கள் அதை விழாவாக கொண்டாடினர்.

ஆனால் என் தாய் என்னைச் சிறிது நேரம் உற்றுப்பார்த்துவிட்டு கட்டி அணைத்துக்கொண்டார். நான் எப்போது குஜராத் சென்றாலும் அவர் இதையே தான் செய்வார். அதுதான் அவரின் குணம். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என அவர் யோசித்ததே இல்லை. ஆனால், தன் பிள்ளைகளுக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே எண்ணமாக இருந்தது.

நான் முதல்வர் ஆன பிறகு என் தாய் ஒரு மந்திரம் சொல்லிக்கொடுத்து அதை தினமும் என்னை கூறச்சொன்னார். அவர் என்னிடம், ‘நீ என்ன வேலை செய்கிறாய் என எனக்குத் தெரியாது. ஆனால், லஞ்சம் மட்டும் வாங்க மாட்டேன் என எனக்கு சத்தியம் செய்து கொடு. அந்த பாவத்தை எப்போதும் செய்யக்கூடாது’ எனக் கூறினார்.

அவரின் அந்த வார்த்தைகள் என் வாழ்க்கையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணத்தையும் கூறுகிறேன். தன் வாழ்நாள் முழுவதும் ஏழ்மையில் வாழ்ந்துகொண்டு உடுத்த நல்ல உடைகூட இல்லாமல் அவர் இருந்தார். அதனால் ஒரு நல்ல நாளில் என்னிடம் அந்த சத்தியத்தை பெற்றுக் கொண்டார். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து