முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தியின் உருவ பொம்மை சுடப்பட்ட விவகாரம்: எந்த வருத்தமும் இல்லை என்கிறார் பூஜா பாண்டே

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

அலிகார், நான் செய்ததில் தவறு எதுவும் இல்லை என்று இந்து மகாசபை தலைவர் பூஜா பாண்டே தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை அடுத்த நவ்ரங்காபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்   இந்து மகாசபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே, காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டார். காந்தியை சுட்டதால் தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்சேவின் மரணத்தை மேன்மைப்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்து மகாசபையின் பெண் தலைவர் உட்பட 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தப்பால் பகுதியில் இருந்த இந்து மகா சபை தேசிய செயலாளர் பூஜா ஷகுண் பாண்டேவையும் அவரது கணவர் அசோக் பாண்டேவையும் போலீசார் நேற்று காலை கைது செய்தனர். இதையடுத்து, அவர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய பூஜா பாண்டே, “ நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை. எனவே எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அரசியல் அமைப்பு சாசனம் வழங்கியுள்ள உரிமையையே நான் பயன்படுத்தினேன்” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து