முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிசாட்-31 செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தம்

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, தகவல் தொடர்பு வசதிக்காக இஸ்ரோ உருவாக்கிய ஜிசாட் -31 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டது.

 தகவல் தொடர்பு வசதிகளைப் பெருக்கும் வகையில், அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 40-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக ‘ஜிசாட்-31’ என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’ உருவாக்கி உள்ளது.

இந்த செயற்கைக்கோள், நேற்று அதிகாலை 2.33 மணியளவில் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும். இதன் ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது ‘இஸ்ரோ’வின் ‘I 2கே பஸ்’ வகையின் மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள். இதன்மூலம் இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் பலன் அடையும். ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள், விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். டெலிவிஷன் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றுக்கும் பயன்படும்.

கடந்த இரண்டு மாதங்களில் கொரூவ்வில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட ‘இஸ்ரோ’வின் இரண்டாவது செயற்கைக்கோள் இதுவாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து