முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று நடக்கிறது

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்றத்தேர்தல் கூட்டணி, மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து விவாதிக்க அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடிபழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.

விருப்ப மனுக்கள்...

பாராளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. பார்லி. தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து மனுக்கள் பெறும்பணியை முதன்முதலாக கடந்த 4-ம் தேதி அ.தி.மு.க.தொடங்கிவிட்டது. இதேபோல் தேர்தல் பிரசாரத்திற்கான குழுக்களையும் அமைத்துள்ளது. இதற்கிடையே அ.தி.மு.க. கூட்டணி குறித்து பல்வேறு தரப்பிலும் ஆர்வத்துடன் பல்வேறு கருத்துகள் எழுப்பப் பட்டு வருகிறது.

விவாதிக்கப்படுகிறது...

இந்தநிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை அக்கட்சியின் தலைமைக்கழகத்தில் நடைபெறுகிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் கூட்டணிகுறித்தும், தேர்தல் வியூகங்கள் குறித்தும் வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து