முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் குன்றத்தூர் பேரூராட்சியில் கழிவு கசடு மேலாண்மைத் திட்டம் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : குன்றத்தூர் பேரூராட்சியில் கழிவு கசடு மேலாண்மை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உறுப்பினர் கே.பழனி தனது தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்த அரசு முன் வருமா ? என்று கேள்வி எழுப்பினார்.

அரசு பரிசீலனை...

அதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்து கூறியதாவது:-

ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் பேரூராட்சியில் மக்கள் தொகை மற்றும் வெளியேறும் கழிவு நீர் ஆகியவற்றின் அடிப்படையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றாக கழிவு நீர் கசடு அகற்றும் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்யும். பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால் அதற்கு மாற்றாக ஜெயலலிதாவின் அரசு கழிவுநீர் கசடு அகற்றும் திட்டத்தை பல்வேறு பேரூராட்சி, நகராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.

மதுராந்தகத்தில்...

54,900 மக்கள் தொகை கொண்ட குன்றத்தூர் பேரூராட்சியில் கழிவுநீர் கசடு அகற்றும் மேலாண்மை திட்டத்தை அரசு செயல்படுத்தும். தி.மு.க. ஆட்சியில் 55 பாதாள சாக்காடை திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 20 திட்டங்களே செயல்படுத்தப்பட்டன. 35 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 19 திட்டப்பணிகளை கூட ஜெயலலிதாவின் அரசு தான் நிறைவேற்றியுள்ளது. மதுராந்தகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து