முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேபிள் டிவி புதிய கட்டண விதி முறை: கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு - டிராய்

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான அவகாசம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டிராய் அறிவித்துள்ளது.

புதிய நடைமுறை...

கேபிள் டி.வி.க்கான இணைப்பில் விருப்பப்பட்ட சேனல்களை தேர்வு செய்து கொள்ளும் புதிய நடைமுறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பணம் செலுத்தும் சந்தாதாரர்கள் தங்களுக்கு தேவையான சேனல்களை தேர்வு செய்து அதற்குரிய கட்டணம் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டது. கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகள் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டு இருந்தது.

கால அவகாசம்...

இந்நிலையில், கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டிராய் நேற்று அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதி அவரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து