முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க மைதானத்தில் முதல் முறையாக டோனி பெயரில் 'பெவிலியன்'

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : முதல் முறையாக கிரிக்கெட் மைதானத்தின் பெவிலியனுக்கு மகேந்திர சிங் டோனியின் பெயர் வைக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பேட்ஸ்மேனாக...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் டோனி, கடந்த 2004-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். தனது அசாத்திய திறமைகளால் அணியின் கேப்டனாக உயர்ந்தார். அத்துடன், ஐசிசியின் 3 முக்கியமான கோப்பைகளை வென்று கொடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வெற்றிக் கேப்டன் என்ற பெருமையையும் டோனி பெற்றார். தற்போது, கேப்டன் பதவியில் இல்லாவிட்டாலும், சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்.

டோனியின் பெயர்...

இந்திய அணி இக்கெட்டான நிலையில் தவிக்கும்போது கை கொடுக்கும் வீரர்களில் முன்னணி இடத்தில் டோனி இருக்கிறார். கடந்த ஓராண்டுகளாக பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்த அவர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் தன்னை மீண்டும் நிரூபித்தார்.இந்நிலையில், முதல் முறையாக கிரிக்கெட் மைதானத்தின் பெவிலியனுக்கு மகேந்திர சிங் டோனியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்காக மைதானம் டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ளது. இந்த மைதானத்தில் தெற்குப் பகுதிக்கு (South stand) எம்.எஸ்.டோனி பெவிலியன் என்ற பெயரிடப்பட்டுள்ளது. டோனியின் சாதனைகளைக் கவுரவப்படுத்தியுள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து