முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்கள் மற்றும் நிதியை உடனடியாக முடக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

காஷ்மீரில் துணை ராணுவம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன. இது குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித் தோவலிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தொலைபேசியில் பேசினார். இது குறித்து ஜான் போல்டன் கூறும் போது,

தீவிரவாத தாக்குதலை முன்கூட்டியே அறிந்து அதனை தடுப்பதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு செய்வோம். எந்தவொரு நாடும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா தெளிவாக உள்ளது என்றார்.

இதற்கிடையில், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

2001-ம் ஆண்டிலேயே வெளிநாட்டு பயங்கரவாத இயக்கமாக ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை அமெரிக்கா அறிவித்தது. எதிர்காலத்தில் அந்த இயக்கம் தாக்குதல் நடத்தாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை நாங்கள் அளிப்போம். பாகிஸ்தான் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஐக்கிய நாடுகள் அவையின் தடை பட்டியலில் உள்ள அமைப்புகளுக்கான நிதி மற்றும் பொருளாதார வளங்களை உடனடியாக முடக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து