முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி தீ விபத்து : ஓட்டல் உரிமையாளர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : டெல்லியில் இரு தமிழர்கள் உள்பட 17 பேர் பலியான தீ விபத்தில் ஓட்டலின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

டெல்லி கரோல்பாக் பகுதியில் ஆர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது. 4 மாடிகளை கொண்ட இந்த ஓட்டலில் 40 - க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 60 - க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அதிகாலை 4.30 மணியளவில் திடீரென ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குழந்தை உட்பட 17 பேர் பலியாகியுள்ளனர். காயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 7 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஓட்டலின் உரிமையாளராக ராகேஷ் கோயல் இருந்து வருகிறார். அவருக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அவர் கத்தார் நாட்டில் இருந்து விமானத்தில் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகிறார் என டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அவர் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைது செய்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து