முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரவிட்டால் எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் - விமானப்படை தளபதி

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

பொக்ரான் : அரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் உரிய பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா கூறி உள்ளார்.   

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி இரவு, பகலாக நடந்து வருகிறது. அதில், விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா பேசியதாவது:-

தேசத்தின் பாதுகாப்பு சவால்களை சமாளிப்பதிலும், இறையாண்மையை பாதுகாப்பதிலும் விமானப்படையின் திறனில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் உரிய பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம்.  

கடமைகளை நிறைவேற்றுவதில் எப்போதும் முன்வரிசையில் இருப்போம். மரபு ரீதியான போரில் நம்மை தோற்கடிக்க முடியாது என்பது எதிரிக்கே தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து