எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், - திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அதிமுக சார்பில் கழக இணை இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் மேலான ஆணைக்கிணங்க புரட்சித்தலைவி அம்மாவின் நீடித்த புகழுக்கு காரணம் அகிலம் வியந்த அஞ்சாமையா அதிசயம் படைத்த ஆளுமையா என்ற தலைப்பில் மாபெரும் பட்டிமன்றம் நிலக்கோட்டையில் நடைபெற்றது ஒன்றிய கழக செயலாளர் யாகப்பன் தலைமை வகித்தார் அம்மையநாயக்கனூர் பேரூர் கழக செயலாளர் தண்டபாணி வரவேற்றார் வத்தலகுண்டு ஒன்றிய கழக செயலாளர் எம் வி எம் பாண்டியன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ஆர் வி என் கண்ணன் மாவட்டக் கழகப் பொருளாளரும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் உதயகுமார், மாவட்ட கழக செயலாளரும் மாநகராட்சி முதல்வருமான வி மருதராஜ் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா விஸ்வநாதன் ஆகியோர் பேசினர் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும் வனத் துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் சிறப்புரையாற்றினார் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முனைவர் வைகைச் செல்வன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது அகிலம் வியந்த அஞ்சாமை என்ற தலைப்பில் நெத்தியடி நாயகனாக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், ஆகியோர் பேசினர் அதிசயம் படைத்த ஆளுமையா என்ற தலைப்பில் கோபி காளிதாஸ் வடுகபட்டி சுந்தரபாண்டியன் ஆகியோர் பேசினர்
நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று கிராமசபை கூட்டம் நடத்துகிறார் கூட்டம் நடத்துவது பெரிதல்ல மக்கள் அன்பை பெறுவது தான் முக்கியம். வீரியம் பெரிதா? காரியம் பெரிதா? என்றால் காரியம் தான் பெரியது கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி தமிழ்நாடு துணை முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பொங்கல் பரிசாக ரூ 1000 வழங்கினார் இது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது இதனை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக மருமகன் சபரீசன் பேச்சை கேட்டுக்கொண்டு கிராமசபை கூட்டம் நடத்துகிறார் அக்கூட்டத்தில் மக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் இது முதல் பொய் இரண்டாவதாக ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு கழக அரசு தான் காரணம் என பொய் சொல்கிறார் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கூடாது என கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியது திமுகவினர் தான் இரண்டரை வருடங்களாக தேர்தலை நிறுத்திவிட்டு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதி நிறைவேற்றப்பட்டுள்ளன தமிழகத்தில் 12624 கிராம ஊராட்சிகள் உள்ளன 80,000 குக்கிராமங்கள் உள்ளன 234 தொகுதிகளிலும் அனைத்து பணிகளும் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது
நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ தங்கதுரை எதற்காக இந்த கட்சியை விட்டு சென்றார் இந்த கட்சியின் மீது என்ன குறை கண்டார்? எதற்காக டிடிவி தினகரன் பின்னால் சென்றார்? அவர் பின்னால் போனதால் எம்எல்ஏ பதவி போனதுதான் மிச்சம். இன்று தெருவில் இருக்கின்றார் வரக்கூடிய இடைத்தேர்தலில் எனக்குத்தான் வெற்றி என இத்தொகை மக்கள் தீர்மானிப்பார்கள். நிலக்கோட்டை தொகுதி என்றும் அம்மாவின் பக்கம் தான் உள்ளது என நிரூபிப்பார்கள் துரோகம் செய்தவர்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை மக்களுக்கு நன்மை செய்யாத துரோகி டிடிவி தினகரன். லோக் ஆயுக்தா சட்டம் அதிகாரத்தில் உள்ளவர்களை விசாரணை செய்வதற்காக உருவாக்கப்பட்ட நீதிமன்றம். இதற்கான நீதிபதி தேர்வு செய்ய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் என்ற முறையில் அழைத்தபோது அவர் ஏன் வரவில்லை. கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என ஸ்டாலின் கூறினார். இதனையடுத்து கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தியை பற்றி பேசவே இல்லை. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகின்றார். இனி கட்சியில் துரோகிகளுக்கு இடம் கிடையாது கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் தலைமையின் கீழ் உள்ளவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கும். தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என துணை ஜனாதிபதி கையால் விருது வழங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கல்வித்துறைக்காக ஒரு 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் உலக முதலீட்டாளர் மாநாடு அம்மா கூடியபோது 2 லட்சம் கோடி முதலீடு கிடைத்தது. தற்போது கழக ஆட்சியில் 3 லட்சத்து 44 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. தமிழகம் அமைதி மாநிலமாக திகழ்கிறது. திமுக ஆட்சியில் இல்லாத புதுமை கழக ஆட்சி செய்து கொண்டு வருகிறது. ஸ்டாலின் ஆசிரியர் போராட்டத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தார். ஆனால் கழக அரசு ராஜதந்திர நடவடிக்கை எடுத்ததாக போராட்டம் கைவிடப்பட்டது. நிதி நிலைமையை அவர்களுக்கு எடுத்துக் கூறினால் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் ஸ்டாலினுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றுவதற்காக கிராமம் கிராமமாக ஸ்டாலின் சென்று வருகின்றார். வருகிற தேர்தலில் திமுகவிற்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகமே வெற்றி பெறும்.
கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் சிறப்பான முறையில் ஆட்சி புரிகின்றனர் அவர்களுக்கு தமிழக மக்கள் தொடர்ந்து பேராதரவை அளிக்க வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பேரூர் கழக செயலாளர் சேகர் வத்தலகுண்டு பேரூர் கழக செயலாளர் பீர்முகமது. முன்னாள் சேர்மன் திவான் பாட்ஷா, பேரவை செயலாளர் vijayarajan முன்னாள் அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதி முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான் நன்றி கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.