முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இருநாடுகள் இடையே மோதல் சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹில் மஹ்முத்தை ஆலோசனை நடத்துவதற்காக அந்நாடு அழைத்துள்ளது

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பஸ்களில்  சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்துகள் வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.

இதில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தால் நாடுமுழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு வர்த்தக முன்னுரிமை நாடு என்ற சலுகையை மத்திய அரசு ரத்து செய்தது.

அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பால் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு 200 சதவீத வரி விதித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் தூதரை அழைத்து, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹில் மஹ்முத்தை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் இதுபற்றி ஆலோசிப்பதற்காக அவரை பாகிஸ்தான் அரசு அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து