முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - மொராக்கோ இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

ரபாட் : இளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - மொராக்கோ இடையே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் நேற்று 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையொப்பமானது.

ஆலோசனை...

அரசுமுறை பயணமாக மொராக்கோ நாட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்பவுரிட்டாவை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வேரறுப்பது, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நிதியுதவிகள் செல்வதை தடை செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது என்று இந்த ஆலோசனையின்போது தீர்மானிக்கப்பட்டது.

4 ஒப்பந்தங்கள்...

மேலும், இருதரப்பிலும் வர்த்தக ரீதியான விசாக்கள் வழங்குவதை எளிமையாக்கும் நடைமுறை, குறைந்த செலவில் வீடுகள் கட்டும் திட்டம், நகர அபிவிருத்தி, ஸ்மார்ட் சிட்டி எனப்படும் மாதிரி நகரங்களை ஏற்படுத்தும் திட்டம், இளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் மொராக்கோவும் இனி இணைந்து செயலாற்ற 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் நேற்று கையொப்பமாகின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து