முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீர மரணமடைந்த கணவரின் உடலை முத்தமிட்டு வழியனுப்பிய மனைவி

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

டேராடூன் : புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த மேஜரின் இறுதிச் சடங்கின் போது அவரின் உடலை முத்தமிட்டு மனைவி இறுதியாக வழியனுப்பி வைத்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேஜர் விஎஸ் தவுன்டியால், கான்ஸ்டபிள் சிவராம், சிப்பாய் அஜய் குமார், ஹரி சிங் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். காயமடைந்த வீரர் குல்சார் முகமது ஸ்ரீநகரில் உள்ள பாதாம்பிபாஹ் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உத்தரகாண்டைச் சேர்ந்த மேஜர் வி.எஸ் தவுன்டியாலின் இறுதிச் சடங்கு நேற்று டேராடூனில் நடைபெற்றது. இறுதிச் சடங்கில், அவரின் மனைவி நிகிதா கவுல், நீண்ட நேரம் கணவரின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்தார். இறுதியாக ஒருமுறை அவருடன் பேசி அவரின் உடலை முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் அவரின் உடலை அடக்கம் செய்யும் சடங்குகள் நடைபெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து