முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்வாமா தாக்குதல் குறித்து சந்தேகம் எழுப்புகிறார் மம்தா

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : பாராளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் காஷ்மீர் தாக்குதல் நடந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் புல்வாமாவில் மத்திய படை மீது தாக்குதல் நடந்திருக்கிறது. ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் நான் ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் எனக்கு இதில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில் அதற்கான வாய்ப்பு ஏன் அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலால் அதிர்ச்சியுற்ற நாம் அமைதியாக இருக்கிறோம். ஆனால் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பேசுகிற பேச்சை வைத்து பார்க்கும் போது அவர்கள் மட்டுமே தேசப்பற்று கொண்டவர்கள் போலவும், நாங்கள் எல்லாம் வெளிநாட்டினர் போலவும் உள்ளது. இவ்வாறு மம்தா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து