முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் தாக்குதலால் நெருக்கடியில் பாக். அரசு

புதன்கிழமை, 27 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : இந்தியா தாக்குதல் தொடுத்ததை அடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டு கூட்டம் நேற்று அவசரமாக கூடியது. எல்லையில் அமைதி நிலவும் வரை இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிடப்படாது என அந்நாட்டு தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பதிலடி கொடுக்க...

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்ததை அடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி இஸ்லாமாபாத்தில் வெளியுறவுத் துறை அதிகாரிகளின் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர், பிரதமர் இம்ரான்கான் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் பர்வேஸ் காதக், தங்கள் படைகள் தயாராக இருந்ததாகவும், இருள் சூழ்ந்து இருந்ததால் பதிலடி கொடுக்க முடியவில்லை என்றார்.

உரிய பதிலடி...

இனி ஒரு முறை இந்தியா இது போல நடந்து கொண்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்தியா எல்லை மீறிய விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை நட்பு நாடுகள் ஆகியவற்றிடம் முறையிட உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்தார்.
இது தவிர நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தை கூட்டி இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதன் அடிப்படையில் பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு நேற்று அவசரமாக கூடியது.

திரையிடப்படாது...

இதற்கிடையே, எல்லையில் அமைதி நிலவும் வரை இந்திய திரைப்படங்களையும், இந்திய கதை சார்ந்த திரைப்படங்களையும் பாகிஸ்தானில் திரையிடப்படாது என்று அந்நாட்டு தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் பவாத் ஹுசைன் தெரிவித்தார். மேலும் இந்திய விளம்பரங்களும் பாகிஸ்தானில் ஒளிபரப்பப்படாது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து