முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் புகுந்து தாக்குதல்: இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது பாகிஸ்தான்

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் எல்லையில் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனால் தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதர் (பொறுப்பு) கவுரவ் அலுவாலியாவை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விளக்கம் அளிக்கவும் சம்மன் அனுப்பி உள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்தியா தொடர்ந்து அத்துமீறி எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் எல்லையில் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதில் 3 பெண்கள் உள்பட பொதுமக்கள் 4 பேர் இறந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இது மனித உரிமை மீறலாகும். இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது. எனவே எல்லையில் அமைதியை ஏற்படுத்த இந்திய படைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து