முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதை உறுதிபடுத்தினார் அந்நாட்டு அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

கராச்சி, தீவிரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி உறுதிபடுத்தி உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் கடந்த 14-ந் தேதி சென்று கொண்டிருந்த துணை ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த இயக்கத்தின் தலைவனாக மவுலானா மசூத் அசார் இருந்து வருகிறான். மசூத் அசாருக்கு எதிராக உலக நாடுகளின் அதிகாரப்பூர்வ தடை, உலகளவில் பயணம் செய்ய தடை மற்றும் சொத்துகளை முடக்க 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளும் கோரிக்கை விடுத்து உள்ளன. மேலும் பதன்கோட் விமானப்படை தள தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து, பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி, ஜெய்ஷ் - இ - முகமது தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு  அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :-

மசூத் அசார் மிகவும் உடல்நிலை சரியில்லை. அவர் தனது வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு இருக்கிறார், ஏனென்றால் அவருக்கு உண்மையில் உடல்நிலை சரியில்லை. அவர்கள் (இந்தியா) பாகிஸ்தானின் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய திடமான, நிரூபிக்ககூடிய ஆதாரங்கள் இருந்தால் எங்களிடம் கொடுக்கலாம். அதனால் நாங்கள் மக்களை சமாதானப்படுத்த முடியும். பாகிஸ்தானின் சுயாதீனமான நீதித்துறையை அணுக முடியும். இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து