முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலிபான்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கனில் 25 ராணுவ வீரர்கள் பலி

சனிக்கிழமை, 2 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள ஆப்கன் ராணுவத் தளத்தில் தலிபான்கள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 25 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும், தலிபான்களுக்கும் இடையே அப்பகுதியில் தாக்குதல் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு உடன்படுவதாக தலிபான்கள் சமீபத்தில் அறிவித்த நிலையில், தற்போது இந்தத் தாக்குதலை தலிபான்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த மூன்று வருடங்களில் தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து