முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

62 ஆண்டுகளாக காது கேளாதவராக நடித்த கணவர் மீது மனைவி விவாகரத்து வழக்கு

வெள்ளிக்கிழமை, 8 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியின் டார்ச்சரிலிருந்து தப்பிக்க, 62 ஆண்டுகளாக காது கேளாதவர் போல் நடித்த கணவர் மீது மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியைச் சேர்ந்தவர் பாரி டவ்சன். இவரது மனைவி டோரத்தி. திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே மனைவியின் டார்ச்சர் தாங்காமல் காது கேளாதவர் போல் பாரி டவ்சன் நடிக்கத் வங்கியுள்ளார். இப்படியே 62 ஆண்டுகளை நகர்ந்து விட்ட நிலையில் சமீபத்தில் யூ.டியூப் வீடியோவில் கரோக்கி இசையை கேட்டு தலையை ஆட்டியபடி பாரி டவ்சன் பாடியுள்ளது சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதை பார்த்த குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

என்றாலும், காது கேளாதவர் போல் நடித்து தம்மை ஏமாற்றியுள்ளாரே என நினைத்து அவரது மனைவி கடுப்பாகி, விவாகரத்து வழக்கு தொடுத்துள்ளார். இத்தம்பதிக்கு 6 பிள்ளைகள். 13 பேரன், பேத்திகள் உள்ளனர். அவர்கள் அனைவருமே பாரி டவ்சன்னை காது கேளாதவர் என்றே நினைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டவ்சன் வழக்கறிஞர் ராபர்ட் கூறிய போது, டவ்சன், தன் மனைவியின் லொட லொட பேச்சு, சண்டையிலிருந்து தன் மனதையும், குடும்ப அமைதியையும் காப்பதற்காக, 62 ஆண்டுகளை தியாகம் செய்துள்ளார் என்று வாதாடியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து