முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார்: தீர்மானத்தை இன்று பரிசீலிக்கிறது ஐ.நா. - பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சீனா வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரும் தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்றுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என சீனா தெரிவித்துள்ளது.

ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நிலையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளின் மூலமே ஆக்கப்பூர்வமான தீர்வை எட்ட முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரும் தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்றுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், மேற்கண்ட கருத்தை சீனா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து