முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே வரி: நாகர்கோவில் கூட்டத்தில் ராகுல் பேச்சு

புதன்கிழமை, 13 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

நெல்லை, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கப்படும் என்று நாகர்கோவில் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசினார்.

நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது,

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி மக்களுக்கான கூட்டணியாகும். பிரதமர் மோடி தமிழகத்தின் மொழி, கலாச்சாரம், வாழ்வாதாரத்திற்கு எதிரான நிலையை கொண்டுள்ளார். 2019 தேர்தலில் தமிழக மக்களின் உரிமை குரல் ஒலிக்கும். 

மத்தியில் தமிழகத்தின் கை ஓங்கியிருந்தது. இப்போது மோடியின் கை ஓங்கியுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக அரசின் ஒவ்வொரு நிறுவனங்களையும் மோடி சிதைத்து வருகிறார். ஒவ்வொரு மாநிலங்களுக்கும் நெருக்கடியை கொடுத்து ஆட்சியை அடக்க முயற்சி செய்கிறார். மோடி எங்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், தமிழகத்தில் அது நடக்காது. தமிழக மக்கள் அடக்கி ஆளுவதை அங்கீகரிக்க மட்டார்கள். தமிழக மக்கள் எப்போது உண்மையின் பக்கம் உள்ளனர். தமிழ் மக்களின் போராட்டம் உண்மை, தர்மம், நியாயத்திற்காக நடக்கும். பிரதமர் மோடி பொய்யை தவிர எதையும் சொல்வது கிடையாது. ரூ. 15 லட்சம் கொடுக்கப்படும் என கூறினார்.

இந்தியாவில் 45 ஆண்டுகள் இல்லாத வகையில் வேலைவாய்ப்பின்மை உள்ளது. தமிழக விவசாயிகள் போராடுகிறார்கள். டெல்லியில் போராடிய விவசாயிகளை நேரடியாக பார்த்தேன். அவர்களுடைய வலி தெரியும், உண்மையான நிலையை பார்த்து வருத்தம் அடைந்தேன்.

எங்களுடைய வாக்குறுதிபடி ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். மோடியோ, அவருடைய தொழில் நண்பர்களுக்காவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும் பணியாற்றுகிறார். இப்போது ஜம்மு காஷ்மீரும் அம்பானியின் வசம் சென்று விட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே வரி, எளிமையான வரி அமலுக்கு வரும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது தமிழகம் முக்கிய தொழில் மையமாகும். பிரதமர் மோடியால் நாடு இரண்டாக பிரிந்து காணப்படுகிறது.

ஒரு பக்கம் பணக்கார்கள் சொகுசாக வாழ்கிறார்கள், மறுபக்கம் விவசாயிகள் வருமானமின்றியும், இளைஞர்கள் வேலையின்றும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். உண்மை வெல்லும் போது பிரதமர் மோடி சிறையில் இருப்பார். ரபேல் விமான ஒப்பந்தத்தில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளார். இவ்வாறு ராகுல் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து