முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17,18 தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்: சென்னை வானிலை மையம் தகவல்

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 17, 18 தேதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழகம் மற்றும் புதுவையில் 15,16 ஆகிய 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். வேலூர், கிருஷ்ணகிரி , திருவண்ணாமலை ,தர்மபுரி, நாமக்கல், திருச்சி, சேலம் , பெரம்பலூர், கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை மார்ச் 17,18 ஆகிய இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் பரவலாக மழை பெய்யும். மற்ற பகுதிகளில் வெயிலின் தாக்கமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பம் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசும் , குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியசும் பதிவாகும். அடுத்த 48 மணி நேரத்திற்கு இதே வெப்பநிலை தொடரும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து