முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: 5.6 ரிக்டர் அளவாக பதிவு

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

Source: provided

மணிலா : பிலிப்பைன்சில் நேற்று காலை 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் லேசாக குலுங்கின.

தெற்கு பிலிப்பைன்சின் சாரங்கனி மாகாணத்தில் நேற்று காலை 7.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அலபேல் நகரில் இருந்து 10 கி.மீ. வடகிழக்கே கடலுக்கடியில் 96 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகாக பதிவாகியிருந்ததாகவும், பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் பூகம்பவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. அலபேல் நகருக்கு அருகில் உள்ள கோரோநடால், ஜெனரல் சான்டோஸ், தெற்கு கோட்டபாட்டோ, தவாவ், டாகுராங், சுல்தான் குதரத், கிதாபவன் மற்றும் ககயான் தி ஓரோ ஆகிய நகரங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து