முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படும் என்றும் அதனால் மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்கு செல்லும் படியும் அறிவுறுத்தியுள்ள வானிலை மையம் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தொலைத்தூர சலனங்களால், தென்தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 11 மணி முதல் நாளை இரவு வரை வழக்கத்தை விட 2 மீட்டர் உயரம் வரை கடலில் அலைகள் எழும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தென் தமிழக கடலோர மீனவர்கள் பாதுகாப்பாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் தெளிவாக காணப்படும் என்றும், அதிகப்பட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து