முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது: ஜனாதிபதி வழங்கினார்

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

நாட்டின் உயரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகளுக்காக, இந்த ஆண்டு மொத்தம் 112 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த குடியரசு தினத்திற்கு முந்தைய நாளில், இந்த விருது பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில், இம்மாதம் 11-ம் தேதி, முதல் கட்டமாக ஜனாதிபதியால் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. அன்று ஒரு பத்ம விபூஷண், 8 பத்ம பூஷன் மற்றும் 46 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

மற்றவர்களுக்கு பத்ம விருதுகள் ஜனாதிபதி மாளிகையில் நேற்று வழங்கப்பட்டன. மதுரையைச் சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளை பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதியிடம் பெற்றார். கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், பரத நாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோரும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் முக்கியமானவர்கள்.  இதே போல, விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து