முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் போட்டியிட சீட் வழங்கவில்லையாம்! பா.ஜ.க.விலிருந்து விலகினார் அசாம் எம்.பி.

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

கவுகாத்தி : அசாம் மாநிலத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி. சர்மாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

அசாம் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. வெற்றி வாய்ப்பு உள்ள தகுதிவாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்து கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில், கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய தேஜ்பூர் எம்.பி.யுமான ஆர்.பி.சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த சர்மா, கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இத்தகவலை பேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ளார். அதில், ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. அமைப்பில் 15 ஆண்டுகளும், பா.ஜ.க.வில் 29 ஆண்டுகளும் பணியாற்றிய நான் இப்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். மாநில பா.ஜ.க. குழு அனுப்பிய வேட்பாளர் பரிந்துரை பட்டியலில் என் பெயரை சேர்க்காமல் என்னை அவமதித்து விட்டார்கள் என சர்மா குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே சர்மா, காங்கிரசில் சேர்ந்து தேஜ்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து