முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலில் மாயாவதி, அகிலேஷ் போட்டியிடவில்லை

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : பாராளுமன்ற தேர்தலில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தலா 38 தொகுதியில் போட்டியிடுகின்றன. ஆனால் அமேதி, ரேபரேலியில் மட்டும் போட்டி இல்லை என்றும் அறிவித்தனர். இந்த தொகுதிகளில் ராகுல்காந்தி, சோனியா காந்தி மீண்டும் போட்டியிடுவதால் எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்று அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

கடந்த மகளிர் தினத்தன்று அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள். கண்ணூஜ் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அகிலேஷ் யாதவ், அசம்கார்க் வேட்பாளராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதே போல் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, நஜினா அல்லது அம்பேத்கர்னாகர் தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது கட்சி தலைவர்களான மாயாவதியும், அகிலேஷ் யாதவும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து