முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா சட்டசபை தேர்தலில் பகுஜன் வேட்பாளராக களமிறங்கும் திருநங்கை

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர் : 4 கட்டங்களாக நடைபெறும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் கோரேய் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளராக காஜல் நாயக் என்ற திருநங்கை களமிறக்கப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநில சட்டசபைக்கான தேர்தலில் 147 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக கோரேய் தொகுதியில் காஜல் நாயக் என்ற திருநங்கை போட்டியிடுகிறார். ஜாஜ்பூர் பகுதியை சேர்ந்த காஜல் நாயக், திருநங்கையர் சங்கத் தலைவராகவும் சமூகச் செயற்பாட்டாளராகவும் உள்ளார். நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பி பல கட்சிகளை அணுகினேன். ஆனால், யாரும் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. என்னை வேட்பாளராக அறிவித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று காஜல் நாயக் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து