முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிராம் வண்டியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு : நெதர்லாந்தில் 3 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

திஹேக் : நெதர்லாந்து நாட்டின் உட்ரெச்ட் நகரில் டிராம் வண்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தார்.

நெதர்லாந்தின் உட்ரெச்ட் நகரின் அக்டோபர்ப்ளெய்ன் என்னுமிடத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் டிராம் வண்டி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதனுள் ஏறிய மர்மநபர் ஒருவர், பயணிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். அதன் பின் அங்கிருந்து தப்பிச் சென்றான். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இதனையடுத்து உட்ரெச்ட் நகரில் உள்ள பள்ளிகள், வணிக வளாகங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன. அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து