முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த கூட்டணியையும் எந்த விதத்திலும் காங்கிரஸ் தொந்தரவு செய்வதில்லை - மாயாவதி, அகிலேஷ் கருத்துக்கு பிரியங்கா பதிலடி

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

பிரயாக்ராஜ் : எந்த கட்சியினரையும், கூட்டணியையும் காங்கிரஸ் கட்சியினர் எவ்விதத்திலும் தொந்தரவு செய்வதில்லை. எங்களது ஒரே நோக்கம், பா.ஜ.க.வை வீழ்த்துவதே ஆகும் என்று மாயாவதி, அகிலேஷ் கருத்துக்கு பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார். 

பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் எனும் எண்ணத்துடன் களமிறங்கியுள்ளன. அதே போல், காங்கிரஸ் கட்சியினரும் பா.ஜ.க.வை வீழ்த்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று மாயாவதி - அகிலேஷ் கூட்டணி தெரிவித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி மூத்த தலைவர்கள் 7 பேரின் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. இதற்கு மாயாவதி - அகிலேஷ் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதற்கு பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார்.

எந்த கட்சியினரையும், கூட்டணியையும் காங்கிரஸ் கட்சியினர் எவ்விதத்திலும் தொந்தரவு செய்வதில்லை. எங்களுக்கு யாருடனும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களது ஒரே நோக்கம், பா.ஜ.க.வை வீழ்த்துவதே ஆகும். காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் அதற்கான முயற்சிகளிலும், பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து