முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பாக்.ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

ஜம்மு : எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.

ஜம்மு காஷ்மீரின் அக்னூர், சுந்தர்பேனி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. நேற்று முன்தினம் இரவு 10.25 மணியளவில் நடத்தப்பட்ட இந்த அத்துமீறிய துப்பாக்கிச்சூடு நேற்று அதிகாலை வரை நீடித்ததாக ராணுவம் தரப்பில் வெளியான தகவல்கள் கூறுகின்றன. மோர்டார்கள் ரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. முன்னதாக, நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து