முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் அரசு வெற்றி

புதன்கிழமை, 20 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

பனாஜி : கோவா சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, புதிய முதல்வரை  தேர்வு செய்வதற்கான கூட்டம் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார். கோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் நேற்று முன்தினம் அதிகாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக, கோவா முதல்வர் காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்திருந்தனர்.

இதற்கிடையே, முதல்வராக பதவியேற்ற பிரமோத் சாவந்த், என்னுடன் 2 துணை முதல்வர்களாக விஜய் சர்தேசாய், சுதின் தவில்கர் ஆகியோர் விரைவில் பதவி ஏற்கவுள்ளனர். இந்த அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் சட்டசபையில் நாளை(இன்று) வாக்கெடுப்பு நடைபெறும். அதில் பா.ஜ.க. அரசு வெற்றி பெறும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோவா சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது. கோவா சட்டசபையில் ஆட்சி அமைக்க மொத்தம் 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலையில், பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு 20 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. அவருக்கு எதிராக 15 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து