முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் போட்டியிடவில்லை: மாயாவதி

புதன்கிழமை, 20 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

80 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்த இரு கட்சிகளும், உ.பி.யில் ராகுல் மற்றும் சோனியா போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்று அறிவித்துள்ளன.

இந்த நிலையில், லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி,

பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக, சமாஜ்வாடி மற்றும் ஆர்.எல்.டியுடன் வலிமையான கூட்டணி அமைத்துள்ளோம். நான் ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதை விட நாம் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதே முக்கியம். நம் கட்சியை வலுப்படுத்துவதற்காக, முன்னர் ஒருமுறை ராஜ்யசபா எம்.பி பதவியை நான் ராஜினாமா செய்துள்ளேன். எனவே, தற்போதுள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு இந்தமுறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். எனது முடிவை கட்சியினர் ஏற்றுக்கொள்வார்கள் என கூறியுள்ளார். மாயாவதியின் இந்த அறிவிப்பு பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து