முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான முதல் டி-20: சூப்பர் ஓவரில் தென்ஆப்ரிக்கா த்ரில் வெற்றி

புதன்கிழமை, 20 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன் : இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், இம்ரான் தாஹிரின் அசத்தலான பந்துவீச்சால் தென் ஆப்ரிக்க அணி சூப்பர் ஓவரில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இலங்கை அணி வரலாறு படைத்து சாதித்தது. அடுத்து நடந்த ஒரு நாள் தொடரை தென் ஆப்ரிக்கா அணி 5-0 என முழுவதுமாக கைப்பற்றியது.

பந்துவீச்சு தேர்வு

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி கேப்டவுனில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டூ ப்ளெசிஸ் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. 135 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. இதனால், போட்டி சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.சூப்பர் ஓவரில் தென் ஆப்ரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. மலிங்கா வீசிய அந்த ஓவரில் டேவிட் மில்லர் தலா 1 சிக்சர், 1 பவுண்டரி விளாச 14 ரன்கள் எடுக்கப்பட்டது. இலங்கை அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது.

முன்னிலை...

அந்த அணியின் திசாரா, பெர்ணான்டோ களமிறங்க தென் ஆப்ரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் பந்துவீசினார். அவரின் துல்லியமான பந்துவீச்சால் இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறினர். இலங்கை அணி வெறும் 5 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. இதனால், தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து