முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயிலில் 3 மணி நேரம் சிக்கி தவித்த தென்னாப்பிரிக்க அதிபர்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

கேப்டவுன், தென்ஆப்பிரிக்காவில் வருகிற மே மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் சிறில் ரமபோசா மீண்டும் போட்டியிடுகிறார்.

அதிபர் சிறில் ரமபோசா நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், ரயிலில் மக்களோடு மக்களாக பயணம் செய்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்தார். இதற்காக கவுட்டெங் மாகாணத்தின் மெபோபானே நகரில் உள்ள ரயில் நிலையத்துக்கு சென்றார். அங்கு அவர் ரயிலுக்காக ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

இதையடுத்து, அவர் மெபோபானேவில் இருந்து தலைநகர் பிரிட்டோரியா செல்லும் ரயிலில் ஏறினார். மெபோபானேவில் இருந்து பிரிட்டோரியா செல்ல 45 நிமிடங்கள் தான் ஆகும். ஆனால் இந்த ரயில் 3 மணி நேரத்துக்கு பிறகுதான் பிரிட்டோரியா சென்றடைந்தது. இதனால் அதிபர் சிறில் ரமபோசா உள்பட பயணிகள் அனைவரும் தவிப்புக்கு உள்ளாகினர். இது குறித்து கருத்து தெரிவித்த அதிபர், இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ரயில்வே நிர்வாகம் நிலைமையை மேம்படுத்தவில்லையென்றால் தலைகள் உருளும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து