முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25-ம் தேதி குமரியில் பிரச்சாரம் தொடங்குகிறார் பிரேமலதா

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 25-ம் தேதி கன்னியாகுமரி தொகுதியில் பிரேமலதா தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்ய உள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் வகையில் அவரது பிரச்சார திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 25-ம் தேதி கன்னியாகுமரி தொகுதியில் பிரேமலதா தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அன்று கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். பின்னர் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். மேலும் தே.மு.தி.க. போட்டியிடும் 4 தொகுதிகளில் அவர் 2 நாட்கள் முகாமிட்டு பிரச்சாரம் செய்கிறார். சட்டசபை தொகுதி வாரியாக அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார். இறுதியில் தனது சகோதரர் சுதீஷ் போட்டியிடும் கள்ளக்குறிச்சி தொகுதியில் தனது பிரச்சாரத்தை முடிக்க பிரேமலதா திட்டமிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து