முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவலாளிகளை அவமானப்படுத்துவதா? ராகுலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : காவலாளி ஒரு திருடன் எனக் கூறி, காவலாளிகளை ராகுல் அவமானப்படுத்துகிறார் என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

நாட்டின் பல்வேறு இடங்களில், அலுவலகங்கள், வங்கிகள் போன்றவற்றில், காவலாளிகளாக பணியாற்றும் 25 லட்சம் பேருடன் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்கள் என்னை பிரதமராக்கவில்லை. நாட்டின் காவலாளியாக்கியுள்ளனர் என நான் தெரிவித்தேன். இப்போது, காவலாளி ஒரு திருடன் எனக் கூறி, காங்கிரஸ் தலைவர் ராகுல், நாடு முழுவதும் உள்ள காவலாளிகளை அவமானப்படுத்துகிறார். இந்த வார்த்தை, காவலாளிகளை எந்த அளவுக்கு காயப்படுத்தும் என எனக்கு தெரியும். இதைப் பற்றி கவலைப்படாமல், அந்த விமர்சனங்களை ஏற்று நம் பணியை தொடர்வோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து