முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் ஒரே தொகுதியில் தந்தையை எதிர்த்து மகள் போட்டி

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தெலுங்கு தேச கட்சியிலும், இவரது மகள் காங்கிரஸ் கட்சி சார்பிலும் பாராளுமன்ற தேர்தல் களத்தில் மோதுகின்றனர். தந்தை, மகள் இருவரும் ஒரெ தொகுதியில் போட்டியிடுவதால் வெற்றி யார் பக்கம் என்பது எதிர்ப்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

விசாகப்பட்டினம் மாவட்டம், அரக்கு பாராளுமன்ற தொகுதியில் தந்தையும் மகளும் எதிரெதிர் கட்சிகள் சார்பில் களம் இறங்கி உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் கிஷோர் சந்திரதேவ் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். இம்முறை இவர் அரக்கு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால், இத்தனை நாட்கள் தனது தந்தைக்கு அரசியலில் உறுதுணையாக இருந்த இவரது மகள் ஸ்ருதி தேவி, காங்கிரஸ் கட்சி சார்பில் இதே தொகுதியில் தந்தையை எதிர்த்து போட்டியிடுகிறார். கிஷோர் சந்திர தேவின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட ஸ்ருதி தேவி, தற்போது அவரையே எதிர்த்து போட்டியிடுவதால், இத்தொகுதியின் முடிவு பெரிதும் எதிர்ப்பார்ப்புக்குள்ளாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து