முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனசேனா கட்சியில் இணைந்தார் சிரஞ்சீவியின் மற்றொரு தம்பி

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

அமராவதி : நடிகர் சிரஞ்சீவியின் மற்றொரு தம்பி நாகபாபு, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் மேற்கு கோதாவரி மாவட்டம், நரசாபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனசேனா கட்சியை தொடங்கிய சிரஞ்சீவியின் 2-வது தம்பியும் நடிகருமான பவன் கல்யாண், இம்முறை கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து ஆந்திராவில் சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலைச் சந்திக்க உள்ளார். இவர் இம்முறை 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சிரஞ்சீவிக்கு தம்பியும், பவன் கல்யாணுக்கு அண்ணனும் நடிகருமான நாகபாபுவும் அரசியலில் குதித்துள்ளார். அவர், தனது தம்பி பவன் கல்யாணை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து ஜனசேனா கட்சியில் இணைந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் மேற்கு கோதாவரி மாவட்டம், நரசாபுரம் தொகுதியில் நாகபாபு போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து