முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வை பற்றி பேச காங்கிரசுக்கு தகுதி இல்லை - ஈசுவரப்பா கடும் கண்டனம்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : பா.ஜ.க.வை பற்றி பேச காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தகுதி இல்லை என்று கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பா கூறினார்.
கர்நாடக பா.ஜ.க. மூத்த தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தேவேகவுடா பிரதமராக இருந்தவர். தான் வகித்த பதவிக்கு ஏற்ப பேச வேண்டும். இந்த தேர்தலில் பா.ஜ.க., இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெற விட மாட்டோம் என்று அவர் சொல்வது சரியல்ல. நீங்கள் முன்பு வெற்றி பெற்ற 2 தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்று பாருங்கள். அதன் பிறகு எங்கள் கட்சி பற்றி அவர் பேசுங்கள். தங்களின் அங்கீகாரத்தை காப்பாற்றிக் கொள்ளவே, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பல்வேறு தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் தகராறு போட்டுக் கொள்கிறார்கள். இத்தகையவர்களுக்கு எங்கள் கட்சியை பற்றி பேச தகுதி இல்லை. இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து